இலங்கைப் பிரஜைகள் கடத்தல் சம்பவம் முறியடிப்பு!

#SriLanka
Mayoorikka
2 years ago
இலங்கைப் பிரஜைகள் கடத்தல் சம்பவம் முறியடிப்பு!

ஜோர்தானில் இருந்து அதன் மேற்குக் கரைக்கு இலங்கைப் பிரஜைகள், 43 பேரை கடத்தும் முயற்சியை ஜோர்தான் பாதுகாப்புத் துறையினர் முறியடித்துள்ளனர்.

 பாலஸ்தீனிய பிரதேசங்களுக்குள் சட்டவிரோத பணிக்காக குறித்த இலங்கையர்கள் அழைத்து செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 அதேநேரம் ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய மனித கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

 குறித்த இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் ஜோர்தான் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4