ஓகஸ்ட் மாதத்தில் வானில் நிகழ்வுள்ள இரண்டு அற்புதம்! இன்று காணலாம்

#SriLanka #Moon
Mayoorikka
2 years ago
ஓகஸ்ட் மாதத்தில் வானில் நிகழ்வுள்ள இரண்டு அற்புதம்! இன்று காணலாம்

இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இரட்டை சந்திர கிரகண நிகழ்வைக் கொண்டுள்ளது.

 இந்த மாதம் முழு சூப்பர் மூனுடன் தொடங்குகிறது, ஒன்று இன்றிரவு (01) உதயமாகும், மற்றையது ஓகஸ்ட் இறுதியில் ஓர் அரிய நீல நிலவு தென்படும் அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 1) இரவு வான்வெளியில் சந்திரன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பூமியிலிருந்து 226,000 மைல்கள் (363,300 கிலோமீட்டர்) தொலைவில் முழு சூப்பர் மூன் இன்றிரவு உயரும், இது கூடுதல் பிரகாசமான மற்றும் பெரிய நிலவை காணலாம்.

 சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என்று பாகிஸ்தான் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஜாவேத் இக்பால் கூறினார்.

 ஓல்ட் ஃபார்மர்ஸ் பஞ்சாங்கத்தின்படி, செவ்வாய்கிழமை பிற்பகல் 2:32 மணிக்கு சந்திரன் உச்சக்கட்ட வெளிச்சத்தை அடையும் "அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, உதயமாகும் சந்திரனைப் பார்க்க உங்கள் பார்வையை தென்கிழக்கு பக்கம் திருப்புங்கள்" என்று யுஎஸ்ஏ டுடே கூறியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4