கின்னஸ் சாதனை படைத்த மஸ்கெலியாவைச் சேர்ந்த 6 வயது மாணவி

#SriLanka #Student #WorldRecord
Prathees
2 years ago
கின்னஸ் சாதனை படைத்த மஸ்கெலியாவைச் சேர்ந்த 6 வயது மாணவி

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை 14 நிமிடங்களில் (நேற்று) நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 விக்னேஸ்வரன் ஷஸ்மிகா (06 வயது) என்ற பாடசாலை மாணவி மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் 01 வருடத்தில் கல்வி கற்று வருகின்றார்.

 மஸ்கெலியா ஸ்ரீ பாத வீதியிலுள்ள பிரவுன்லோ தோட்டத்தின் இந்து ஆலயத்திலிருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை இரண்டு கிலோமீற்றர் தூரத்தை 14 நிமிடங்களில் நடந்து இந்த பாடசாலை மாணவி இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

 கின்னஸ் உலக சாதனை மேற்பார்வைக் குழுவின் பிரதிநிதி ஜூட் நிமலன் அவர்களும் பள்ளி மாணவியின் அணிவகுப்பு மற்றும் கின்னஸ் சாதனையை மேற்பார்வையிட வந்திருந்தார்.

 பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள், தான் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மாணவி வி.ஷஸ்மிகா இந்த சாதனையை நிறுவினார்.

 வி.ஷஸ்மிகாவின் தந்தை எஸ்.விக்னேஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை நடைபயணம் மேற்கொண்டு இந்த நாட்டிலேயே சாதனை படைத்தார்.

 எனவே கின்னஸ் சாதனை படைக்கும் ஆசை தனக்கு இருப்பதாக மாணவி வி.ஷாஸ்மிகா தெரிவித்துள்ளார்.

 கின்னஸ் சாதனையை நிறுவியதன் பின்னர், இலங்கை கின்னஸ் சாதனை மேற்பார்வைக் குழு உறுப்பினர் ஜூட் நிமலன் அவர்களால் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4