அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு!

#SriLanka #Court Order #Ajith Rohana
Prathees
2 years ago
அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு!

எவ்வித நியாயமான காரணமும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை செல்லுபடியற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அந்த மனு, முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் இந்த வழக்கின் மற்றொரு பகுதி இன்று நடைபெற உள்ளதால் இந்த மனு மீதான பரிசீலனை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பெஞ்ச் தெரிவித்துள்ளது.

 தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தம்மை நியாயமான காரணமின்றி கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டு குறித்த இடமாற்றத்தை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4