இலங்கையில் தரம் ஒன்றில் இருந்தே ஆங்கில கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Susil Premajayantha #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் தரம் ஒன்றில் இருந்தே ஆங்கில கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சியின்றி அல்லது முன்பள்ளி டிப்ளோமா இல்லாமல் முன்பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

கடுவெல பொமிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்  மூன்று மற்றும் நான்கு வயதுடைய பிள்ளைகளின் மனங்கள் சரியான முறைமையின்றி குழப்பமடைந்தால் பாடசாலைக் கல்வியினால் அவர்களை மீளக் கட்டியெழுப்ப முடியாது. எனவே பாலர் பாடசாலைகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன்  கல்விச் சீர்திருத்தங்களுடன்,  இந்த ஆண்டு முதல் தரம் முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை  ஆரம்பக் கல்வியை மேம்படுத்த யுனிசெப் உதவியுடன் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  கல்வியை நடுநிலையில் ஆரம்பிக்க முடியாது எனவும் முன்பள்ளிகளிலேயே ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4