அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்தினால் சிறை மற்றும் அபராதம்

#SriLanka #Police #Warning #Mobile
Prasu
2 years ago
அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்தினால் சிறை மற்றும் அபராதம்

119 அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தவறான தகவல்களை வேண்டுமென்று வழங்குபவர்கள் அல்லது அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 இந்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்குவதால் நாளாந்தம் சுமார் 3,000 முதல் 3,500 அழைப்புகள் பெறப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4