கோதுமை மா இறக்குமதியில் பாரிய மோசடி!

#SriLanka #Wheat flour #Lanka4
Thamilini
2 years ago
கோதுமை மா இறக்குமதியில் பாரிய மோசடி!

இரண்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இலங்கைக்கான கோதுமை மா இறக்குமதியை ஜனாதிபதியின் ஆலோசகர் தடுத்து நிறுத்தி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக  தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இணையதளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் கோதுமை மா இறக்குமதியை ஆலோசகர் நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கோதுமை மா இறக்குமதியில் கிலோ ஒன்றுக்கு 35 ரூபா அறவிடப்படும் எனவும், உலக சந்தையில் கோதுமை மாவின் பெறுமதி 110 ரூபாவாக இருக்கும் போது, ​​இந்த வரியைச் சேர்த்தால், வர்த்தகர்கள் இலாபம் ஈட்டி விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒரு கிலோ 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனக் கூறிய அவர்,  ஆலோசகரின் தலையீட்டால் கோதுமை மா இறக்குமதியை நிறுத்தப்பட்டு, இரண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோதுமை தானியங்களை கிலோவுக்கு 3 ரூபாய் வரி விதித்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

 அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், ஒரு கிலோ கோதுமை மாவை 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4