பாடசாலைகளுக்கு தண்ணீருக்கு கட்டணம்: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்ட தகவல்

#SriLanka #School #water
Prathees
2 years ago
பாடசாலைகளுக்கு தண்ணீருக்கு கட்டணம்:   தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்ட தகவல்

பாடசாலைகளுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகின்றமையினால், அது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத, இவ்வாறான பாடசாலைகள் தொடர்பில் தமக்கு கடந்த காலங்களில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

 “1988ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை தீர்மானத்தின்படி பாடசாலைகளுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

 கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் நீர் பாடசாலை அல்லாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டது. 

 ஒரு பாடசாலையில் ஒருவர் ஒரு நாளைக்கு 20 லீற்றர் பயன்படுத்துகிறார், எனவே ஒரு மாதத்தில் 20 நாட்கள் நடத்தினால், மாதத்திற்கு 400 லீற்றர். 

 ஒரு பள்ளியில் மாணவர்கள் மற்றும் கல்வி சாரா மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது. அந்தத் தொகையைத் தாண்டினால், அந்தத் தொகையை நீங்கள் கண்டிப்பாகச் செலுத்த வேண்டியிருக்கும்” என்றார். 

 இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் குடிநீர் கட்டணத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4 பிரதேசங்களில் இ-பில் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பியல் பத்மநாத தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4