ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா

#India #Temple #இன்று #Tamilnews #தாம்பூலம்
Mani
2 years ago
ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில்,காப்பு கட்டி விரதம் இருந்த 148 பக்தர்கள்

நேற்று இரவு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவிலில் இருந்து கரகம் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும்,மண்ணடியில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சியும், கும்பம் போடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வியாழக்கிழமை கிராம தேவதையான பொன்னியம்மனுக்கு ஊர் மக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்,வியாழக்கிழமை குமாரி மக்கள் எனப்படும்

பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும்,தெரு கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், பூ கரகம் புறப்பாடு, அலகு பானை நிற்கவைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த குமாரி மக்கள் நேற்று மாலை

ஈஸ்வரன் கோவில் அருகே புனித நீராடினர். பின்னர்,அவர்களை பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதன் பின்னர், கோவிலின் அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் நேற்று இரவு ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர், மங்கள வாத்தியம், வானவேடிக்கை மற்றும் பேண்ட் வாத்தியத்துடன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும்,விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4