குழந்தையுடன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

#India #Tamil People #children #people #husband #wife #Tamilnews #Breakingnews #ImportantNews #Coimbatore
Mani
1 year ago
குழந்தையுடன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

கோயம்புத்தூர் செட்டிப்பாளயத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று வயது குழந்தையுடன் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டிய போதை இளைஞரை சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் மீட்டனர்.

கூலித்தொழிலாளியான செல்வம் என்பவரின் மனைவி காளீஸ்வரி கடந்தவாரம் அவரிடம் சண்டையிட்டு இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றதையடுத்து, அங்கு சென்ற செல்வம் மகனை தூக்கிக் கொண்டு கோபுரத்தின் மீது ஏறி பிரச்சனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.