தென் மாகாணத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
தென் மாகாணத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

தென் மாகாணத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், லக்ஷபான பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை மின்சாரம் கடத்தும் பாதை அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 220 கிலோவொட் மின்சார விநியோகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் கேபிள் செல்லும் வீதியில் தெனியாய சிறிபாகம பகுதியில் ஸ்தம்பித்துள்ளது. தனியார் காணி தொடர்பான பிரச்சினை காரணமாக இத்திட்டம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்  நந்திக பத்திரகே "இதைச் செய்ய பொறியியலாளர்கள் தயாராக உள்ளனர், இது நிறைவடைந்தால், இரண்டு வாரங்களில் இந்த சிக்கலை தீர்க்க முடியும், பின்னர் இந்த பாதை 150 கிலோமீட்டருக்கு முடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4