ஜாக்சன் ஆண்டனியின் உடல்நிலை ஆபத்தில் : மருத்துவர்களின் முடிவு

#SriLanka #Colombo #Hospital
Prathees
2 years ago
ஜாக்சன் ஆண்டனியின் உடல்நிலை ஆபத்தில் : மருத்துவர்களின் முடிவு

விபத்துக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அன்டனி தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக ஜக்சன் அன்டனியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்க தீர்மானித்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அவரை வைத்தியசாலையில் வைத்திருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் நேற்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

 அங்குதான் ஜாக்சன் அன்டனியை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

 எவ்வாறாயினும், ஜாக்சன் அன்டனியின் இரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும், தற்போது நோயாளி ஒருவருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச அளவு மருந்து அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஜக்சன் அன்டனிக்கு நெஞ்சு பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நிலை தற்போது குணமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4