இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு!

138 உதவி சுங்க அத்தியட்சகர்கள் மற்றும் 45 சுங்க பரிசோதகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  

ருவன்வெல்ல, கலபிடமட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் பேசிய அவர்,  "நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளால் அரசுப் பணிக்கான ஆட்சேர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும்,  சுங்கச்சாவடியில் பல  காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். 

அதில் மிக அத்தியாவசியமான பகுதியை பணியமர்த்துவதற்கு நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம் எனக் கூறிய அவர், முதலில் அதில் உள்ளவர்களை மட்டுமே பணியில் அமர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் 138 உதவி சுங்க அதிகாரிகள் மற்றும் 45 சுங்க பரிசோதகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகூடிய போட்டி பரீட்சை உள்ளது என்றும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

இந்த ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் 22 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி ஒக்டோபர் 16 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும். இது தொடர்பான விண்ணப்பம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4