பிரான்ஸில் இஸ்ரேலில் மரணித்தவர்களுக்கு மின்விளக்கணைத்து அஞ்சலி
#France
#Israel
#War
#Lanka4
#power cuts
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
10 months ago
இஸ்ரேல் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரம் தனது விளக்குகளை அணைந்து மெளனித்தது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரசபைக் கட்டிடங்களும் மின் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கியது.
மார்செயில் உள்ள Palais du Pharo கட்டிடமும் இருளில் மூழ்கியது. அதேவேளை, நேற்று மாலை பரிசின் Place Victor Hugo பகுதியில் இருந்து மாலை 6.30 மணி அளவில் அமைதி பேரணி ஒன்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இடம்பெற்றது.
இந்த பேரணி இரவு 8 மணி அளவில் Trocadéro பகுதியில் சென்று நிறைவடைந்ததாக அறிய முடிகிறது.