மன்னார் கடற்பகுதியில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்!!
மன்னார் தெற்கு கடல் பகுதியில் இன்று (14) பெருமளவான போதைப்பொருளை கைப்பறியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களும், போதைப்பொருள் சரக்குகளும் மன்னாரில் உள்ள தல்பாடு ஜெட்டிக்கு கொண்டு வரப்பட்டதுடன், அங்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) பரிசோதனை செய்துள்ளது.
பகுப்பாய்வில், இரண்டு சாக்குப்பைகளிலும் 50 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள ஹாஷிஷ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் கைப்பற்றப்பட்ட ஹாஷிஷ் ஆகியவை மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்