இஸ்ரேல் - ஹமாஸ் போர் : கடந்த 24 மணிநேரத்தில் 297 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மோதல்களில் 550க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதார அதிகாரிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வருகின்றது. இதில் 18 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.