மிஹிந்தலையில் பொலிஸாரை தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Police #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மிஹிந்தலையில் பொலிஸாரை தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

மிஹிந்தல புடா பீமாவில் 25 பொலிஸ் உத்தியோகத்தர்களை  தொடர்ந்தும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்டபோதிலும், பொலிஸாரை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ இன்று (11.12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  பொலிஸாரை வாபஸ் பெறுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் கூறினார். 

மிஹிந்தலா பொது மைதானத்தில் கடமையாற்றும் அதிகாரிகளை அந்த அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் திரும்பப் பெறுவதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸார் செயற்படுவதால் பொலிஸ் அதிகாரிகள் இங்கு திரும்பப் பெறப்பட மாட்டார்கள். மிஹிந்தலை புனித மைதானத்தில் இருந்து அகற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் தீர்மானம் எடுக்கவில்லை. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட 25 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்னும் கடமையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4