விடுதலையானார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி!

#SriLanka #Protest #Lanka4 #Missing #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
விடுதலையானார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி!

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

images/content-image/1705052704.jpg

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4