புத்தளம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது சனத் நிஷாந்தவின் பூதவுடல்!

#SriLanka #Death #Accident #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
புத்தளம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது சனத் நிஷாந்தவின் பூதவுடல்!

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

பொது அஞ்சலிக்காக நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. 

ந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1706246794.jpg

அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலைக்கு நேற்று இரவு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் உட்பட பல தரப்பினரும் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4