கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி முதியவர் ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#Kilinochchi
Thamilini
1 hour ago
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்