இளவரசி கேட்மிடில்டனின் புற்றுநோய் தொடர்பில் தொலைக்காட்சி ஊடாக அறிந்துக்கொண்ட ஹரி மற்றும் மேகன்!

#SriLanka #world_news #Tamilnews #sri lanka tamil news #England
Dhushanthini K
1 month ago
இளவரசி கேட்மிடில்டனின் புற்றுநோய் தொடர்பில் தொலைக்காட்சி ஊடாக அறிந்துக்கொண்ட ஹரி மற்றும் மேகன்!

கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதலை இளவரசர் ஹாரி தொலைக்காட்சியில் அறிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த பின்னர் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். 

"கேட் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை நாங்கள்  விரும்புகிறோம், அவர்கள் தனிப்பட்ட முறையில் அமைதியுடன் வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என சசெக்ஸ் தெரிவித்துள்ளது. 

இளவரசி கேட் மிடில்டன் அண்மையில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து மருத்துவக் குழு தடுப்பு கீமோதெரபியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தெரிவித்துளு்ளார். தற்போது அவர்   சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.