குழந்தைகளின் உணவில் மோசடி செய்த சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
குழந்தைகளின் உணவில் மோசடி செய்த சுவிஸ் நிறுவனம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

குழந்தைகள் உணவுக்கு பிரபலமான, சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான Cerelac என்னும் குழந்தைகள் உணவில் மோசடி செய்தது தொடர்பாக, அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நெஸ்லே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு Public Eye மற்றும் International Baby Food Action Network ஆகிய அமைப்புகள் கோரியுள்ளன. 

சில நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேவின் முன்னணி குழந்தைகள் உணவான Cerelacஇல் அதிக அளவு சர்க்கரை இருப்பது சுவிட்சர்லாந்தில் உள்ள Public Eye மற்றும் International Baby Food Action Network என்னும் அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!