2024 ஐரோப்பிய கால்பந்து போட்டி : அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
2024 ஐரோப்பிய கால்பந்து போட்டி : அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்!

2024 ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. 

காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியது. வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.  

பின்னர் பெனால்டி உதை மூலம் போட்டியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர். பெனால்டி உதை மூலம் 5க்கு 3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டி நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி ஒன்றுக்கு 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது.