பொது மக்களிடம் மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி!
#SriLanka
#SouthKorea
Dhushanthini K
4 months ago

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இராணுவச் சட்டத்தை சுமத்துவதற்கான தனது கைவிடப்பட்ட முயற்சி நாட்டை அரசியல் குழப்பத்தில் தள்ளியது மற்றும் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான அழைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில் அவர் பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நாட்டு மக்களுக்காக 02 நிமிடம் உரையாற்றிய அவர், "இந்த அவசரகால இராணுவச் சட்டப் பிரகடனம், மாநில விவகாரங்களுக்கான இறுதிப் பொறுப்பான கட்சி என்ற எனது விரக்தியிலிருந்து உருவானது" என்று கூறியுள்ளார்.
தென் கொரிய குடிமக்களுக்கு "கவலை மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதாக கூறிய அவர், ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் உண்மையாக மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



