இறக்குமதி செய்யப்பட்ட 75,000 கிலோ அரிசி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது!

#SriLanka #rice
Thamilini
1 year ago
இறக்குமதி செய்யப்பட்ட  75,000 கிலோ அரிசி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது!

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது. 

 அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை கச்சா அரிசி ஒரு கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி கையிருப்பு நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4