மொல்லிக்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டொல்பின்கள்!

#SriLanka #dolphin
Thamilini
1 year ago
மொல்லிக்குளம்  பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டொல்பின்கள்!

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன் கனத்த பிரதேசத்தின் கரையோரத்தில் உயிரிழந்த பல டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 பின்னர் அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகத்தின் சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ. எல். யு. மதுவந்தி வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் மீன்களின் பிரேத பரிசோதனை செய்தனர். 

 அங்கு 11 டால்பின்கள் இறந்து கிடந்தன, மீன்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த விலங்குகள் வலையில் சிக்கி, கடற்கரையில் வீசப்பட்டிருக்கலாம் என்று ஊகித்தனர்.

 இது தொடர்பான தகவல்கள் நேற்று (07) புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

 எவ்வாறாயினும், விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கையைப் பெறுவதற்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4