சீனாவில் மூன்றாவது நாள் : பொது மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்கும் ஜனாதிபதி!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
சீனாவில் மூன்றாவது நாள் : பொது மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்கும் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (16) காலை மூன்றாவது நாளாகத் தொடங்கும் பொது மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்க உள்ளார். 

 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த "முதலீட்டு அமர்வு", ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. 

 பின்னர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன மக்களின் மாவீரர் நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளார். 

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று பிற்பகல் சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் சீன தேசிய காங்கிரஸின் தலைவர் ஜாவோ லிஜி ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாட உள்ளார். 

 இந்த நிகழ்வுகளில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4