காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 04 பணயக் கைதிகள் விடுதலை!

#SriLanka #Israel #War
Dhushanthini K
2 months ago
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 04 பணயக் கைதிகள் விடுதலை!

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இன்று (25) விடுவிக்கப்படவுள்ள நான்கு பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் தற்போது அறிவித்துள்ளது. 

 கரினா அரீவ், டேனிலா கில்போவா, நாம லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர், மேலும் அவர்கள் அனைவரும் இஸ்ரேலிய வீரர்கள் என்று கூறப்படுகிறது. 

 அதன்படி, இந்த பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்கு ஈடாக, இஸ்ரேல் தன்னிடம் உள்ள 180 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இது இரண்டாவது பணயக்கைதிகள் பரிமாற்றமாகும். 

 முதல் பரிமாற்றத்தில், மூன்று பணயக்கைதிகளும் 90 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். 


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!