காசாவை கைப்பற்றுவதாக உறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
![காசாவை கைப்பற்றுவதாக உறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்](https://ms.lanka4.com/images/thumb/1738778719.jpg)
காசா பகுதியை அமெரிக்கா கைப்ற்றிக் கொள்ளும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் டிரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பிறகு பேசிய அதிபர் டிரம்ப், "அமெரிக்கா காசா பகுதியை எடுத்துக் கொண்டு, அங்கு ஒரு வேலையை செய்ய உள்ளது.
நாங்கள் அதற்கு உரிமம் கொள்வோம். அங்குள்ள வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவோம். நலப்பரப்பை சீர்ப்படுத்துவோம்." "இடிந்துபோன கட்டிடங்களை அகற்றுவோம்.
பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்து, எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவோம். அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்று கூறினார்.
போரால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)