பொது வெளியில் 10 நிமிடம் மட்டுமே தோன்றிய மெஸ்ஸி - விரக்தியில் இரசிகர்கள் செய்த செயல்!

#India #SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
பொது வெளியில்  10 நிமிடம் மட்டுமே தோன்றிய மெஸ்ஸி - விரக்தியில் இரசிகர்கள் செய்த செயல்!

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த லியோனல் மெஸ்ஸி இன்று (13) காலை கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்திற்கு வந்தார். 

 அங்கு நடைபெறும் ஒரு கண்காட்சி கால்பந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். 

 இருப்பினும், அவர் மைதானத்திற்கு வருகை தந்து 10 நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

 இதனால் விரக்தியடைந்த இரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

மெஸ்ஸியை 10 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது என்றும், ஏற்பாட்டாளர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

 இந்த நிகழ்விற்கான டிக்கெட்டை ஏற்பாட்டாளர்கள் 18,000 ரூபாய்க்கு (இலங்கை ரூபாய் 61,000) விற்றதாகக் கூறப்படுகிறது. 

 இருப்பினும், நிகழ்வின் முக்கிய ஏற்பாட்டாளர் தற்போது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4