நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தி துறை பகுதியில் சடடைவிரோத மணல் மண் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், மேலும் ஒரு வெறுமனே சென்ற டிப்பர் வாகனத்தையும் நேற்றிரவு சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தி துறை பொலிஸ் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

பத்து வருடங்களுக்குமேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து விற்பனை செய்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் டிப்பர் வாகனம் உரிய ஆவணங்களுடன் காணப்பட்டமையால் அவ் டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளத்துடன் மற்றய டிப்பர் மற்றும் அதன் சாரதி ஆகியோர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.