டயானா கமகே மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
#SriLanka
#Court Order
#Diana Gamage
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது குற்றப் புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் சாட்சியங்களை பிப்ரவரி 16 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்து, ஜூலை 14, 2016 முதல் நவம்பர் 1, 2020 வரை கடவுச்சீட்டு பெற குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியது உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் டயானா கமகே மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்