பொது அவசரகால நிலை நீட்டிப்பு - வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
#SriLanka
#Gazette
#StateOfEmergency
Thamilini
3 hours ago
இலங்கையில் பொது அவசரகால நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயிர்வாழ்வை உறுதி செய்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அவசரக்காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.