ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை திருட்டு
#Australia
#Robbery
#statue
Prasu
2 hours ago
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமுதாய கூடம் செயல்பட்டு வருகிறது.
அங்கு சுமார் 240 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 2021ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்திய சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கல சிலை திருடப்பட்டுள்ளது.
கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்ற கும்பல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(வீடியோ இங்கே )