ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையில் இருந்து இருவர் விடுதலை!
#SriLanka
#Jaffna
#Prison
#78 Independence Day
Thamilini
1 hour ago
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், யாழ் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் அவர்களின் தலைமையில் இன்று காலை 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்