சட்டவிரோத விலங்கு தோல்களுடன் கட்டுநாயக்காவில் சிக்கிய வர்த்தகர்!
#SriLanka
#Arrest
#Airport
#Katunayaka
Soruban
3 weeks ago
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் 37 வயதுடைய வர்த்தகர் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், முதலை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வனவகைகளைச் சேர்ந்த 19 உலர்த்தப்பட்ட தோல் பகுதிகள் மீட்கப்பட்டன.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளில் மறைத்து கொண்டு வந்த இத்தோல்களை ‘ஆடைகள்’ எனத் தெரிவித்து அதிகாரிகளைத் தவிர்க்க முயன்றும், நுணுக்கமான சோதனையில் அவை கண்டறியப்பட்டன.
சம்பவம் தொடர்பாக வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.