இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரை சந்தித்தார் ஜனாதிபதி!
#SriLanka
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதியும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதருமான செர்ஜியோ கோரை இன்று (18) காலை டெல்லியில் சந்தித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், ஜனாதிபதி திசாநாயக்க 'AI உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள அவர், அங்கு வைத்து அமெரிக்க தூதரை சந்தித்துள்ளார்.
இதன்போது இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், வணிக உறவுகளை ஆழப்படுத்துதல் மற்றும் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகள் குறித்து இரு பிரிவுகளும் விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்