மொனராகலையில் கஞ்சா தோட்டம் முற்றுகை - ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#drugs
#seize
Prasu
3 months ago
மொனராகலை ஹம்பேகமுவ உனகந்த பகுதியில் ஹம்பேகமுவ காவல் நிலைய அதிகாரிகள் குழுவால் ஒரு பெரிய அளவிலான கஞ்சா பயிர்த்தோட்டம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது.
இத்தோட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இதன் பெறுமதி பல மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனகந்த பகுதியில் வசிப்பவர் என்பதுடன் சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் .
சம்பவம் தொடர்பாக ஹம்பேகமுவ காவல் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )