டெல்லி நீதிமன்றத்தில் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்த நடிகை கஜோல்

#Cinema #Delhi #Actress #Movie #HighCourt #AI
Prasu
4 months ago
டெல்லி நீதிமன்றத்தில் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்த நடிகை கஜோல்

தன்னுடைய பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டு பிரபல நடிகை கஜோல் டெல்லி நீதிமன்றத்தில் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் வணிக லாபத்திற்காக நடிகை கஜோலின் பெயர், செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் அவர் உருவத்தை ஒத்த செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ற்க்கு முன்னதாக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சிரஞ்சீவி, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சான் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4