மாமனார் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
மாமனார் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

தெரணியகல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உடமாலிபொட பிரதேசத்தில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் மாலிபொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதன் விளைவாக மாமனார் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக தெரணியகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!