ஐஸ் போதைப்பொருளுடன் வழக்கறிஞர் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#drugs
#Ice
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கெசல்வத்த, சஞ்சியாராச்சி வட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார்.
தற்போது அவர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் 130 மில்லிகிராம் ஐஸ், 'ஐஸ்' உட்கொள்ளப் பயன்படுத்தப்படும் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் ஒரு வழக்கறிஞரின் அடையாள அட்டை ஆகியவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் இருந்த வழக்கறிஞரின் அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது, அவர் 1996 ஆம் ஆண்டு ஒரு வழக்கறிஞராகப் பதவியேற்றவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் அளுத்கடே நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்