பன்னிபிட்டியவில் பாரிய விபத்து - ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே இன்று (24) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் திடீரென நுழைந்த முச்சக்கர வண்டியைத் தவிர்க்க முயன்ற பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற இருவர் லேசான காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்