தமிழ் மொழியில் ஒருவர் இறந்ததை எவ்வாறு சொல்ல முடியும்?
#Death
#Tamil
#Lanka4
#language
Prasu
1 month ago
ஒருவர் இறந்தார் என்பதை ஆங்கிலத்தில் Died அல்லது Passed away என சொல்ல முடியும். ஆனால், அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியாது.
இந்நிலையில், தமிழ் மொழியில் சரியாக சொன்னால் ஒருவர் எவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அறிய முடியும்.
1) காலமானார் - வயதாகி இறப்பது.
2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது.
3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது.
4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது.
5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது.
6) துயில் எய்தினார் - தூக்கத்தில் உயிர் போகுதல்.
7) இயற்கை எய்தினார் - பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல்.
அதாவது, தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், ஜல சமாதி ஆகுதல், விமானம், ஹெலிகாப்டர் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு இறப்பது.
(வீடியோ இங்கே )