ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - 2 பேர் கைது
#SriLanka
#GunShoot
Soruban
21 hours ago
ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியே குறித்த சந்தேகநபர் எனவும், அவருக்கு பெண் ஒருவர் துணையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு வடக்கு பிரிவு குற்றத் தடுப்பு பணியகம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.