முரசுமோட்டையில் மஞ்சள் அறுவடை விழா! மாகாண நிதி ஒதுக்கீட்டில் விவசாயி சாதனை.
#SriLanka
#Festival
#Lanka4
#Fund
#Farmer
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிமூலம் செய்கை மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் அறுவடை நிகழ்வு முரசுமோட்டை ஊரியான் பகுதியில் இ.இராசரத்தினம் என்ற விவசாயின் வயலில் நடைபெற்றது.
கால் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் மஞ்சள் இன அறுவடை நிகழ்வானது கண்டாவளை விவசாய போதனாசிரியர் க.தனுசீலன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சற்குணநேசன், பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாயப்போதனாசிரியர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்