அதிரடி அனுமதி: பொன்னி சம்பா மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு பச்சைக்கொடி காட்டிய அமைச்சரவை.

#SriLanka #rice #Lanka4 #Import #Ship #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
அதிரடி அனுமதி: பொன்னி சம்பா மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு பச்சைக்கொடி காட்டிய அமைச்சரவை.

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அரிசியை ஏற்றிய முதலாவது கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் எமது செய்தி பிரிவுக்கு இந்த விடயத்தினை தெரிவித்தார்.

நாட்டின் உள்நாட்டு சந்தையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொன்னி சம்பா, பால் பொன்னி மற்றும் ஜி.ஆர் 11 என்று அழைக்கப்படும் அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஆயிரத்து 40 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை கடந்த வாரத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில், இறக்குமதிக்கான அனுமதி குறித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் சூரியன் செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்பை விதிக்க வேண்டாம் என வர்த்தக அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!