லெபனானின் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு முகாம் மீது வெடிப்பு சம்பவம்!
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை (UNIFIL) முகாம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு லெபனானில் உள்ள எடைசா (El Adeisa) பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு முகாம் ஒன்றின் மீது நேற்று (ஏப்ரல் 3, 2026) மதியம் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இந்த வெடிப்பில் மூன்று அமைதிப்படை வீரர்கள் காயமடைந்தனர்.
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது அல்லது தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை என UNIFIL ஊடகப் பேச்சாளர் கண்டிஸ் ஆர்டியல் (Kandice Ardiel) தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஏவுகணைத் தாக்குதலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு அமைதிப்படை வீரர் உயிரிந்தார். திங்கட்கிழமையன்று மற்றொரு வெடிப்புச் சம்பவத்தில் மேலும் இரண்டு இந்தோனேசிய வீரர்கள் கொல்லப்பட்டனர். 1978 ஆம் ஆண்டு இந்தப் படை உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 97 வீரர்கள் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐநா அமைதிப்படை வீரர்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, UNIFIL படையின் தற்போதைய அதிகாரப்பூர்வ பணிக்காலம் 2026 டிசம்பர் 31 உடன் நிறைவடைகிறது.
(வீடியோ இங்கே )