இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து - 7 பேர் மரணம்

#Death #Accident #Hospital #Indonesia #Lanka4 #Train
Prasu
1 hour ago
இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து - 7 பேர் மரணம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர். 

பெகாசி திமூர் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த விபத்தில் படுகாயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!