இங்கிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் - உஷார் நிலையில் அதிகாரிகள்!
இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை 'கணிசமான நிலையில் இருந்து கடினமான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வின் காரணமாக, இங்கிலாந்தில் அடுத்த 06 மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக கருதப்படுகிறது.
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பயங்கரவாத நிகழ்வாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது, இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல்கள் பரவலாக அதிகரித்திருப்பதையும் பிரதிபலிக்கிறது.
பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் மற்றும் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் ஆகியோர், பொதுமக்கள் 'அச்சமடையாமல்' 'விழிப்புடனும் எச்சரிக்கையுடனும்' இருக்குமாறும், ஏதேனும் கவலைகள் இருந்தால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )