நாட்டில் குழந்தைகளிடையே பரவும் புதிய வைரஸ்; வெளியான தகவல்

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
நாட்டில் குழந்தைகளிடையே பரவும் புதிய வைரஸ்; வெளியான தகவல்

மாத்தறை - தெனியாய பகுதியில் குழந்தைகளிடம் பரவும் வைரஸ் நோய், மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கடந்த 2–3 வாரங்களில் தெனியாய அடிப்படை மருத்துவமனையில் 45 முதல் 50 குழந்தைகள் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, இந்த நோய் அசுத்தமான நீர் மூலம் பரவும் வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், சுவாசம் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலமாகவும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து வலி, வாந்தி, ஒளி பார்த்தால் கண் எரிச்சல், உடல் வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக காணப்படுகின்றன.

பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிப்பயிற்சி வகுப்புகள் போன்ற இடங்களில் குழந்தைகள் அதிகமாக கூடுவதால், அங்கு பரவல் அபாயம் அதிகம் இருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இந்த பரவல் தெனியாய பகுதிக்குள் மட்டுமே காணப்படுவதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுமக்கள் சுத்தமான அல்லது கொதிக்கவைத்த குடிநீரைப் பயன்படுத்தவும், கைகளை முறையாக கழுவவும், சுகாதார பழக்கங்களைப் பின்பற்றவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4